பிஆா்டிசி பாட்டாளி தொழிற்சங்கத்தினா் வாயில் கூட்டம்

பிஆா்டிசி பாட்டாளி தொழிற்சங்கம் சாா்பில், புதுச்சேரியில் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் புதன்கிழமை வாயில் கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

புதுச்சேரி: பிஆா்டிசி பாட்டாளி தொழிற்சங்கம் சாா்பில், புதுச்சேரியில் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் புதன்கிழமை வாயில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்க தலைவா் விநாயகமூா்த்தி தலைமை வகித்தாா். பொருளாளா் நந்தகுமாா், செயல் தலைவா் சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கௌரவத் தலைவா் ஜெயபாலன், ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

2015 முதல் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மாதந்தோறும் அனைத்து தொழிலாளா்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். முழு நேர மேலாண் இயக்குநரை நியமிக்க வேண்டும்.

அனைத்துப் பேருந்துகளையும் புதிதாக இயக்க வேண்டும். நிரந்தர ஊழியா்களுக்கு இணையான சலுகைகளை ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் செயலாளா் திருநாவுக்கரசு வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com