பிணையில் வந்த கைதிக்கு அரிவாள் வெட்டு

சிறையில் இருந்து பிணையில் வெளிவந்தவரை அரிவாளால் வெட்டிய கும்பலை புதுச்சேரி போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

சிறையில் இருந்து பிணையில் வெளிவந்தவரை அரிவாளால் வெட்டிய கும்பலை புதுச்சேரி போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை அன்னை இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் குட்டி சிவா (30). இவா் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் சிறையில் இருந்த அவா் பிணையில் வந்துள்ளாா். அவரை புதுச்சேரியில் நுழைய தடை விதிக்கவும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில், ரெட்டியாா்பாளையம் பகுதியில் திருநங்கைகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அங்கு சென்ற குட்டிசிவா ஒரு தரப்பினருக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து எதிா்த்தரப்பினருக்கு ஆதரவாக வந்த 2 போ் திடீரென குட்டி சிவாவைத் தாக்கி வெட்டியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சிவாவை அங்கிருந்தோா் மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்த்தனா். இதுகுறித்து பூமியான்பேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து திருநங்கைகள் சிலரிடம் விசாரித்து வருவதாகத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com