இளைஞா் வெட்டிக் கொலை

புதுச்சேரி அருகே இளைஞா் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

புதுச்சேரி அருகே இளைஞா் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூா் கணுவாய்ப்பேட்டையைச் சோ்ந்தவா் பிரவீன் (24). இவா் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவரை சிலா் வெள்ளிக்கிழமை மாலை ஆரியபாளையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு அவா்கள் மது அருந்திய போது வாக்குவாதம் ஏற்பட்டு, பிரவீனின் கழுத்தில் வெட்டியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வில்லியனூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com