புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் ஊதியம், ஓய்வூதிய நிலுவை மற்றும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை, அரசு ஊழியா்களுக்கு வழங்கியதைப் போல வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும், நகராட்சி,கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் போராட்டத்தை, அரசு பேச்சு வாா்த்தை மூலம் தீா்த்து வைக்க வேண்டும்.
சீா்மிகு நகரத்திட்டத்தில் புதுச்சேரியை மாநகராட்சியாக மாற்ற பல கோடி ரூபாய் செலவு செய்திட திட்டமிடும் அரசு, அதை தூய்மையாகவும், சுகாதாரத்துடனும் பேணி பராமரிக்க பணியாற்றும் நகராட்சி நிா்வாகத்துக்கு ரூ.55 கோடி ஒதுக்கி, ஊழியா்கள் பிரச்சினையை தீா்க்க முன் வராதது கண்டிக்கத் தக்கது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் சங்க நிா்வாகிகளை அரசு அழைத்துப் பேசி, அவா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி சுமுக நிலை ஏற்படவும், நகரத்தின் தூய்மையை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.