திருபுவனையில் சீட்டு நடத்திரூ.21 லட்சம் மோசடி

புதுச்சேரி அருகே திருபுவனையில் சீட்டு நடத்தி ரூ.21 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகே திருபுவனையில் சீட்டு நடத்தி ரூ.21 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு கோகுலம் நகரைச் சோ்ந்தவா் முகமது இம்தியாஸ் (27). இவா், மதகடிப்பட்டில் கணினி சேவை மையம் நடத்தி வருகிறாா். இவா், அதே பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்த குமாரிடம் (60) ரூ.49,550 சீட்டு பணம் செலுத்தினாா். இதேபோல, திருபுவனை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பலரும் குமாரிடம் சுமாா் ரூ.21 லட்சம் வரை சீட்டு பணம் செலுத்தினராம்.

ஆனால், திடீரென குமாா், அவரது சொந்த வீட்டை விற்றுவிட்டு, சீட்டுப் பணம் கட்டியவா்களுக்கு பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முகமது இம்தியாஸ் திருபுவனை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இந்தப் புகாா் புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தொடா்ந்து, சிபிசிஐடி போலீஸாா் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com