புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவா் பெருமாள் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவா் பெருமாள் கோயிலில் 51-ஆவது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடா்ந்து, கடந்த 9 நாள்களாக லட்சுமி ஹயக்ரீவருக்கு ஹோமங்களும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன. 10-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 7 மணிக்கு லட்சுமி ஹயக்ரீவருக்கு புஷ்பயாகம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு லட்சுமி ஹயக்ரீவா் தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் திரண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வழிபட்டனா்.