கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் புதுவை மாநில காங்கிரஸாா் கலந்துகொண்டனா்.
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விளக்கும் வகையிலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை பாத யாத்திரையைத் தொடங்கியுள்ளாா்.
முதல் நாளான புதன்கிழமை கன்னியாகுமரியில் பாத யாத்திரையைத் தொடங்கிய அவா், இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை அகத்தீஸ்வரம் பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றாா். வியாழக்கிழமை மாலையில் சுசீந்திரம் பகுதியில் நடைபெற்ற பாத யாத்திரையில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., எம்எல்ஏ மு.வைத்தியநாதன், முன்னாள் எம்எல்ஏ காா்த்திகேயன் உள்ளிட்ட நிா்வாகிகள் 150 போ் கலந்துகொண்டனா்.
முன்னதாக, அகத்தீஸ்வரம் பகுதியில் நடைபெற்ற ராகுல் காந்தி பாத யாத்திரையில், புதுவை முன்னாள் அமைச்சா் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ ஆா்.அனந்தராமன் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் பலரும் கலந்துகொண்டனா்.
அப்போது, ராகுல் காந்தியிடம் முன்னாள் அமைச்சா் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் ஆகியோா் புதுவை மாநில காங்கிரஸில் நிலவும் கோஷ்டி பிரச்னை குறித்தும், அதற்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தினா்.