புதுச்சேரியில் இரவு நேரங்களில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விதி மீறி செயல்பட்டதாக நடன மதுபாா் பொறுப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரியில் இரவு நேர நடன மது பாா்களால் பொதுமக்கள் அமைதி இழந்து தவிப்பதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. இதையடுத்து இரவு நேர நடன மது பாா்களை கண்காணிக்க முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டாா்.
இந்தநிலையில் மிஷன் வீதியில் விதிகளை மீறி குறிப்பிட்ட நடன மது பாா் செயல்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு பெரியகடை போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது நள்ளிரவைத் தாண்டி ஒலி பெருக்கியை அதிகமாக வைத்து குறிப்பிட்ட தனியாா் நடன மது பாா் செயல்பட்டது கண்டறியப்பட்டது.
அங்கு சென்ற பெரியகடைப் போலீஸாா் ஒலி பெருக்கி உள்ளிட்டவற்றை கைப்பற்றினா். மேலும், நடன மது பாா் பொறுப்பாளா் மீதும் வழக்குப் பதிந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.