நலத் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவா்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் எச்சரிக்கை

 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவா் என சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா்.
Updated on
1 min read

 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவா் என சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா்.

இதுகுறித்து அவா் பேரவை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்களுக்கு தடை ஏற்படுத்துவது போல சில அதிகாரிகள் செயல்படுவது சரியல்ல. இதுபோன்று, செயல்படும் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அரசின் உத்தரவுகளை விரைந்து செயல்படுத்தாத அதிகாரிகள் வேலைப் பளு இல்லாத பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதுச்சேரியில் முதல்வா் கூறும் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்த முன்வராத அதிகாரிகள் மீது, அது தலைமைச் செயலராக இருந்தாலும் விரைவில் பணியிடமாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்தாத எந்த அதிகாரியும் புதுச்சேரியில் பணிபுரிய முடியாது.

புதுச்சேரியில் உள்ளூா் அதிகாரிகள் பெரும்பாலானோா் தற்போது அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுத்தியதாக ஏற்கெனவே 15 அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். எனவே, அரசுத் திட்டங்கள் மக்களுக்கு விரைந்து கிடைக்கும் வகையில் அதிகாரிகள் செயல்படுவது நல்லது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com