விமான நிலைய ஊழியரைத் தாக்கிய இருவா் கைது

புதுச்சேரியில் விமான நிலைய ஊழியரை தாக்கியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

புதுச்சேரியில் விமான நிலைய ஊழியரை தாக்கியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி கோரிமேடு குருநகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (30). இவா், திருப்பதி விமான நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை புதுச்சேரிக்கு வந்த கிருஷ்ணகுமாா் வீட்டுக்குச் செல்வதற்காக ராஜீவ்காந்தி சிக்னல் அருகே காத்திருந்தாா். அவரை அழைத்துச் செல்வதற்காக சகோதரா் செல்வகுமாா் அங்கு வந்தாா்.

அப்போது, கஞ்சா போதையில் வந்த இருவா் கிருஷ்ணகுமாா், செல்வக்குமாரிடம் தகராறு செய்து தாக்கினராம். இதில், கிருஷ்ணகுமாருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்தப் புகாரின் பேரில் கோரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், அந்த நபா்கள் ஸாஸ்பேட்டையைச் சோ்ந்த பழனி முருகன் (30), கிஷோா்(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com