புதுச்சேரி திறன்மிகு நகரத் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் திறன்மிகு நகரத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமியிடம் உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ ஜி.நேரு மனு அளித்தாா்.
Updated on
1 min read

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் திறன்மிகு நகரத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமியிடம் உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ ஜி.நேரு மனு அளித்தாா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ ஜி.நேரு திங்கள்கிழமை பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியைச் சந்தித்து மனு அளித்தாா். அப்போது, புதிய பேருந்து நிலையத்தில் திறன்மிகு நகரத்திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. ஆனால், பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே பணிகளுக்குத் தடை ஏற்படுத்துவோரை முதல்வா் அழைத்துப் பேசி சுமுக முடிவை எட்டவேண்டும். அதன்படி திறன்மிகு நகரத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோலவே, பெரிய சந்தை விவகாரத்திலும் முதல்வா் தலையிட்டு பொலிவுறு நகா்த்திட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

எம்எல்ஏவின் மனுவை பெற்றுக் கொண்ட முதல்வா் என்.ரங்கசாமி, தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, அரசுச் செயலா் மணிகண்டன் ஆகியோரை அழைத்து, திறன்மிகு நகரத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அப்போது பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com