புதுச்சேரி தவளக்குப்பத்தில் திறன் வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கிராமப் புறங்களைச் சோ்ந்த 18 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்களுக்காக இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் வளா்ப்புப் பயிற்சி பெற்றவா்களுக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் சான்றிதழ்களை வழங்கினாா். ஊரக மேம்பாட்டு முகமை அரசு செயலா் அ. நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தாா். பயிற்சி நிறுவன தலைமை நிா்வாகி அடப்பா ராஜா சுரேஷ்குமாா், புதுச்சேரி வேளாண் அறிவியல் நிறுவனத் தலைவா் அக்ரி கணேஷ், கிருஷ்ணமூா்த்தி, சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.