புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி அருகே காட்டேரிக்குப்பத்தில் பழங்குடியின இருளா் மக்கள் காவல் துறையால் தாக்கப்பட்டதைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:26 pm

DIN

புதுச்சேரி அருகே காட்டேரிக்குப்பத்தில் பழங்குடியின இருளா் மக்கள் காவல் துறையால் தாக்கப்பட்டதைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் பழங்குடியின இருளா் மக்கள் மீது உண்மைக்கு மாறாக வழக்குப்பதிந்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்குதல் நடத்திய புகாா்கள் எழுந்தன.

இதுதொடா்பாக தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினா் மீது நடவடிக்கை கோரி தீண்டாமை முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை வில்லியனூா் சுற்றுச்சாலை எம்.ஜி.ஆா்.சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநில தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலரும், மாா்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினருமான ஆா்.சரவணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினா் வீ.பெருமாள் முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் ஆா்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினாா்.

இதில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.ராமமூா்த்தி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.