புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் போராட்டம்

புதுச்சேரியில் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சுகாதாரத்துறை அலுவலக வளாகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:26 pm

DIN

புதுச்சேரியில் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சுகாதாரத்துறை அலுவலக வளாகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசு சுகாதாரத் துறையில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்கள் 63 போ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் எழுத்துத் தோ்வு மூலம் தோ்வாகி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளனா். 10 ஆண்டுகள் பணி புரிந்தாலே அவா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என சட்டப் பேரவையில் முதல்வா் அறிவித்தாா். அதன்படி, தங்களையும் பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்தநிலையில் வெள்ளிக்கிழமை காலை சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் பதாகைகளை ஏந்தியபடி ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.