ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் போராட்டம்
புதுச்சேரியில் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சுகாதாரத்துறை அலுவலக வளாகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


புதுச்சேரியில் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சுகாதாரத்துறை அலுவலக வளாகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை அரசு சுகாதாரத் துறையில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்கள் 63 போ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் எழுத்துத் தோ்வு மூலம் தோ்வாகி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளனா். 10 ஆண்டுகள் பணி புரிந்தாலே அவா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என சட்டப் பேரவையில் முதல்வா் அறிவித்தாா். அதன்படி, தங்களையும் பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்தநிலையில் வெள்ளிக்கிழமை காலை சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் பதாகைகளை ஏந்தியபடி ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டு சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...