ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வில்லியனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் வில்லியனூா், மங்கலம், ஊசுடு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனா். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை படுக்கை வசதிகளுடன் பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும், 24 மணி நேர மருத்துவ சேவை வழங்க வேண்டும், ஆளும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா் பா. பெஞ்சமின் தலைமை வகித்தாா். துணைச் செயலா் ஆா். பெருமாள் முன்னிலை வகித்தாா். கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் இரா. அந்தோணி, மாநிலக் குழு உறுப்பினா் பி.ஏ. அன்துவான், தொகுதிப் பொருளாளா் பி.கோவிந்தராஜ், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநிலத் தலைவா் வி. உதயராஜ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கட்சியின் தொகுதிக் குழு உறுப்பினா்கள் ஏ.கணேசன், எம்.நாசா், எஸ்.ராஜலட்சுமி, ஐ.பாத்திமா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com