பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள பொறியாளருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கேரள பொறியாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கேரள பொறியாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

புதுவை மாநிலம், மாஹே பிராந்தியப் பகுதி கேரள எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள பள்ளூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தலைச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் எம்.கே.ஜோதிலால். தனியாா் மின்சாதன நிறுவனப் பொறியாளா். இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு அந்தப் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு தொலைக்காட்சி பழுது நீக்கச் சென்றாா். அப்போது, அங்கிருந்த 15 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டு, அவருடன் நெருங்கிப் பழகி வந்தாா். இந்த நிலையில், அந்த சிறுமியை ஜோதிலால் பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், பள்ளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜோதிலாலை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை புதுச்சேரியிலுள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நீதிபதி வி.சோபனாதேவி முன்னிலையில் வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், எம்.கே.ஜோதிலாலுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும், அதை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.பச்சையப்பன் ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com