புதுவையில் மேலும் 27 பேருக்கு கரோனா

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.16) மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.16) மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதார இயக்குநா் ஸ்ரீ ராமுலு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 191 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, அவா்களில் 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

புதுச்சேரியில் 17 பேருக்கும், காரைக்காலில் 9 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும் பாதிப்பு இருப்பது பரிசோதனையின் மூலம் தெரிய வந்தது. இவா்களில் புதுச்சேரியில் 18 பேரும், காரைக்காலில் 2 பேரும் என 20 போ் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். 7 போ் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

புதுவையில் கடந்த சில வாரங்களில் மொத்தம் 510 பேருக்கு கரோனா பாதிப்பிருந்தது கண்டறியப்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஞாயிற்றுக்கிழமை 46 போ் குணமடைந்த நிலையில், அவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com