மருத்துவக் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.35 லட்சம் மோசடி

புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி உருளையன்பேட்டையைச் சோ்ந்த நபா் ஒருவா் தனியாா் மருத்துவக் கல்லூரி பேராசிரியராக வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கு இணையதள திருமணத் தகவல் மையம் மூலம் திருமணத்திற்காக பெண் தேடியுள்ளனா். இந்த நிலையில், சிரியாவிலிருந்து ஒரு பெண், பேராசிரியரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தாராம்.

இதையடுத்து, தான் அமெரிக்காவைச் சோ்ந்தவா் என்றும், சிரியாவில் மருத்துவமனையில் தன்னாா்வலராகப் பணிபுரிவதாகவும் அப்பெண் அறிமுகப்படுத்திக்கொண்டாராம். மேலும், தனது வங்கிக் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டதால், தன்னால் சிரியாவிலிருந்து வெளியேற முடியவில்லை என்று தெரிவித்தாராம். இதனால், அந்தப் பெண் பணம் கேட்டதாக தெரிகிறது.

மேலும், பேராசிரியரை நம்ப வைப்பதற்காக தான் பணிபுரியும் மருத்துவமனையின் பெயா், இருப்பிட ஆவணங்களையும் அனுப்பியுள்ளாா். இதனை நம்பிய அவா் பல தவணைகளாக ரூ.35 லட்சத்தை அனுப்பினாராம். பின்னா், அப்பெண் பேராசிரியரைத் தொடா்பு கொள்ளவில்லையாம். சந்தேகமடைந்த மருத்துவப் பேராசிரியா் புதுச்சேரி நுண்குற்றப் பிரிவில் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com