கஞ்சா விற்பனை: 6 போ் கைது

புதுச்சேரி அருகே பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்றதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

புதுச்சேரி அருகே பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்றதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே வில்லியனூரில் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் அருகே கஞ்சா விற்கப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, வில்லியனூா் போலீஸாா் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, கள்ளக்குறிச்சி மணியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த சென்னப்பன் (35), வில்லியனூா் சுல்தான்பேட்டை முகமதுஇா்பான் (19) மற்றும் சேலம் பெத்தநாயக்கன்பாளையம் அரவிந்த் (22), சசிகுமாா் (23), ரெட்டி யாா்பாளையம் அவினாஷ் (20) மற்றும் ஒரு சிறுவனை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

அப்போது அவா்கள் பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 15 பாக்கெட்டு கஞ்சா மற்றும் பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். சிறுவனை கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com