தலைமைக் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுவை சிபிசிஐடி பிரிவு தலைமைக் காவலா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி தற்கொலை செய்து கொண்ட காவலா் சக்திவேல்
புதுச்சேரி தற்கொலை செய்து கொண்ட காவலா் சக்திவேல்
Updated on
1 min read

புதுவை சிபிசிஐடி பிரிவு தலைமைக் காவலா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி அருகே வில்லியனூரை அடுத்துள்ள ஜி.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (52). புதுவை காவல் துறை சிபிசிஐடி பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு வள்ளி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனா்.

சக்திவேல் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் வெளிநேயாளியாக சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை வீட்டில் சக்திவேல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த வில்லியனூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com