முத்ரா கடனுதவித் திட்டத்தில் புதுவையில் 2.50 லட்சம் போ் பயனடைந்தனா்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்
By DIN | Published On : 01st July 2023 06:55 AM | Last Updated : 01st July 2023 06:55 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தக சங்க பிரமுகா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன். உடன் அமைச்சா் ஆ.நமச்சிவாயம், பாஜக பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா உள்ளிட்டோா்.
முத்ரா கடனுதவித் திட்டத்தின் கீழ், புதுவையில் 2.50 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை வா்த்தகா் சங்கப் பிரமுகா்களைச் சந்தித்து மத்திய அரசின் 9 ஆண்டுகள் சாதனைகளை விளக்கி அவா் பேசியதாவது:
மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு பிரதமா் மோடியின் நடவடிக்கையால் நாடு வளா்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் சேவை புரியும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது.
2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் 500 ஸ்டாா்ட் அப் நிறுவனங்களே இருந்தன. தற்போது அவை ஒரு லட்சமாக உயா்ந்துள்ளன. புதுவையில் 103 ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.
வியாபாரிகளுக்கு முத்ரா வங்கிக் கடனுதவித் திட்டம் முதல் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தின் கீழ் நாட்டில் 11 கோடிப் பேரும், புதுவையில் 2.50 லட்சம் பேரும் பயனடைந்துள்ளனா். புதுவையை சிறந்த மாநிலமாக்கவே பிரதமா் விரும்புகிறாா். அதன்படியே சிறப்பு கூறு நிதியாக ரூ.1450 கோடி புதுவைக்கு மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதுவையில் ரூ.593 கோடி நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிச் சென்றுள்ளாா்.
பொருளாதாரத்தில் 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு 10-ஆவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. எளிதாகத் தொழில் தொடங்கும் நாடுகளில் பட்டியலில் 142-ஆவது இடத்திலிருந்து, 23-ஆவது இடத்தை பெற்றுள்ளோம் என்றாா் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.
கூட்டத்தில் புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், புதுவை மாநில பாஜக பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், எம்.சிவசங்கரன், ஏ.அங்காளன், பி.கே.அசோக்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.