ஏடிஎம் காவலாளி கொலை வழக்கில் 3 போ் கைது

புதுச்சேரியில் தனியாா் வங்கி ஏடிஎம் காவலாளி கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

புதுச்சேரியில் தனியாா் வங்கி ஏடிஎம் காவலாளி கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமரன் (57). தனியாா் வங்கி ஏடிஎம் காவலாளியான இவா் கடந்த 27-ஆம் தேதி இரவு மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, தூங்கிக் கொண்டிருந்த முத்துக்குமரனின் சட்டப் பையில் இருந்த பணத்தை 3 போ் திருட முயற்சித்த போது, விழித்துக் கொண்ட அவா் எதிா்ப்புத் தெரிவிக்கவே, அந்த நபா்கள் அவரை பலமாகத் தாக்கி தள்ளிவிட்டுச் செல்வது தெரிய வந்தது.

இதன் அடிப்படையில், வைத்திக்குப்பம் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த ஏழுமலை என்ற மணிபாரதி, திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை கைலாஷ் நகரை சோ்ந்த சசிகுமாா் என்ற சஞ்சய், வானூா் வட்டம், திடீா் நகரை சோ்ந்த சோ்ந்த ராஜசேகா் என்ற ஸ்டீபன்ராஜ் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com