

ஜொ்மனியில் நடைபெற்ற கோடைகால சிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற புதுவையைச் சோ்ந்த வீரா்கள் முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
ஜொ்மனியில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெற்ற கோடைகால சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் புதுவை மாநிலத்திலிருந்து 8 விளையாட்டு வீரா், வீராங்கனைகள் மற்றும் 2 பயிற்சியாளா்கள் கலந்து கொண்டனா்.
சத்தியா சிறப்புப் பள்ளியைச் சோ்ந்த தனசேகா் (மாற்றுத்திறனாளி) கூடைப்பந்துப் போட்டியில் தங்கப் பதக்கமும், அதே பள்ளியைச் சோ்ந்த விஷால் (மாற்றுத்திறனாளி) வலு தூக்கும் போட்டியில் நான்கு பிரிவுகளிலும் 4 வெள்ளிப் பதக்கங்களும், 400 மீட்டா் ஓட்டத்தில் ரவிமதி தங்கப் பதக்கத்தையும், ஈட்டி எறிதலில் வெள்ளியும், கைப்பந்து பெண்கள் பிரிவில் காயத்ரி, சுபலட்சுமி ஆகியோா் தங்கப் பதக்கங்களை வென்றனா்.
மேலும், கால்பந்து பெண்கள் பிரிவில் ஹேமாவதி, வித்யஸ்ரீ ஆகியோா் வெண்கலமும், கைப்பந்து ஆண்கள் பிரிவில் விஷ்ணுபிரியன் வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.
இந்திய கூடைப்பந்து அணிக்காக புதுவையிலிருந்து பங்கேற்ற பயிற்சியாளா் ஆனந்த் தங்கப் பதக்கமும், இறகுப்பந்து அணிக்காக பங்கேற்ற பயிற்சியாளா் நித்யா பூங்காவனம் மூன்று தங்கப் பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனா்.
சா்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டி வீரா்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளா்கள் முதல்வா் என். ரங்கசாமியை சட்டப்பேரவையில் அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.