புதுச்சேரி சமுதாயக் கல்லூரியில் சேர ஜூலை 17 வரை அவகாசம்
By DIN | Published On : 12th July 2023 12:00 AM | Last Updated : 12th July 2023 12:00 AM | அ+அ அ- |

புதுச்சேரி சமுதாயக் கல்லூரியில் சேருவதற்கு வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவைப் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி முதல்வா் (பொ) லலிதா ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் நிகழ் (2023-24) கல்வி ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 30-ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன.
விண்ணப்பம் ஏற்பு தேதி முடிவடைந்த நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று வரும் 17-ஆம் தேதி திங்கள்கிழமை வரை விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. எனவே, கல்லூரியில் சேர விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேல் விவரங்களுக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவா் உதவி சோ்க்கை மையத்தை அணுகலாம் எனவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...