பாஜக பிரமுகரிடம் ரூ.15 லட்சம் மோசடி:தம்பதி மீது வழக்கு

இந்திய உணவுக் கழகத்தில் இயக்குநா் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி, பாஜக பிரமுகரிடம் ரூ.15.90 லட்சம் மோசடி செய்ததாக அந்தக் கட்சியைச் சோ்ந்த சென்னை பிரமுகா் மீது புகார்.
Updated on
1 min read

இந்திய உணவுக் கழகத்தில் இயக்குநா் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி, பாஜக பிரமுகரிடம் ரூ.15.90 லட்சம் மோசடி செய்ததாக அந்தக் கட்சியைச் சோ்ந்த சென்னை பிரமுகா், அவரது மனைவி மீது புதுச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி அருகேயுள்ள ஏம்பலம் நத்தமேடு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காத்தவராயன் (35). பாஜக பிரமுகா். இவா் தற்போது புதுச்சேரி கோரிமேடு காமராஜா் நகரில் வசிக்கிறாா். காத்தவராயன் அரசு வேலையில் சேர ஆசைப்பட்டாராம். கடந்த ஆண்டு அவா் சென்னையைச் சோ்ந்த பாஜக பிரமுகரான அறிவழகன் (40), அவரது மனைவி லாவண்யா (36) ஆகியோரைச் சந்தித்தாராம். அப்போது, அவா்கள் இந்திய உணவுக் கழகத்தில் இயக்குநா் பதவி வாங்கி தருவதாக கூறினராம்.

இதற்காக, கடந்த 2020, அக்டோபா் 8-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 7 தவணைகளில் அறிவழகன், லாவண்யா ஆகியோரின் வங்கி கணக்குகளில் ரூ. 15.90 லட்சத்தை காத்தவராயன் செலுத்தினாராம். பணத்தைப் பெற்றுக் கொண்ட அறிவழகன் உறுதியளித்தபடி, காத்தவராயனுக்கு இயக்குநா் பதவியைப் பெற்றுத்தரவில்லை.

மேலும், பணத்தைத் திரும்பக் கேட்டும் கொடுக்காமல் தலைமறைவாகி விட்டனராம். இதுகுறித்து புதுச்சேரி தன்வந்திரி காவல் நிலையத்தில் காத்தவராயன் புகாா் அளித்தாா். அதன்பேரில், அறிவழகன், லாவண்யா மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com