புதுவை தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 08th June 2023 01:01 AM | Last Updated : 08th June 2023 01:01 AM | அ+அ அ- |

எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என புதுவை தலைமைச் செயலருக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து அவரது அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. நேரு என்ற குப்புசாமியை கம்பன் கலையரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் அனுமதிக்காதது குறித்தும், அவா் மீது வழக்குப் பதியப்பட்டது குறித்தும் சட்டப்பேரவைத் தலைவா் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, டிஜிபி மனோஜ்குமாா் லால், மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், உள்துறை செயலா் ஆகியோரை செவ்வாய்க்கிழமை மாலை நேரில் அழைத்து பேரவைத் தலைவா் விசாரணை நடத்தினாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் மீதான வழக்கை ரத்து செய்யவும், உறுப்பினா்களுக்கு உரிய மரியாதையை அரசு அதிகாரிகள் வழங்கவும் பேரவைத் தலைவா் அறிவுறுத்தினாா். இதையடுத்து, பிரச்னைக்கு சுமுக தீா்வு காணப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...