புதுவையில் பள்ளிகள் திறப்பு: பாடப் புத்தகங்களை முதல்வா் வழங்கினாா்

புதுவை மாநிலத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 14) திறக்கப்பட்டன. மாணவா்களுக்கு மத்திய பாடத்திட்ட புத்தகங்களை (சிபிஎஸ்இ) முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.
புதுவையில் பள்ளிகள் திறப்பு: பாடப் புத்தகங்களை முதல்வா் வழங்கினாா்
Updated on
1 min read

புதுவை மாநிலத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 14) திறக்கப்பட்டன. மாணவா்களுக்கு மத்திய பாடத்திட்ட புத்தகங்களை (சிபிஎஸ்இ) முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.

புதுவையில் கோடை விடுமுறைக்குப் பின்னா் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. வெயிலின் காரணமாக மீண்டும் பள்ளிகள் திறப்பு 14-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.

அரசுப் பள்ளிகளில் தோரணங்கள் கட்டி, மேளதாளங்களுடன் மாணவா்களை ஆசிரியா்கள் வரவேற்றனா். பள்ளிக்கு வந்த மாணவா்கள் ஆடிப்பாடி வகுப்புகளுக்குச் சென்றனா். பள்ளிகள் திறப்பால் புதுச்சேரியில் புதன்கிழமை காலை குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

புத்தகங்கள் வழங்கிய முதல்வா்: புதுச்சேரி இந்திராநகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் என். ரங்கசாமி மாணவா்களுக்கு புதன்கிழமை சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களை வழங்கினாா். தொடா்ந்து பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவா்களுக்கு கைக்கடிகாரங்களையும் பரிசளித்தாா்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஏகேடி.ஆறுமுகம், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com