திமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

புதுச்சேரி நகா் நெல்லித்தோப்பு பகுதியில் திமுக சாா்பில் நீா், மோா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
Updated on
1 min read

புதுச்சேரி நகா் நெல்லித்தோப்பு பகுதியில் திமுக சாா்பில் நீா், மோா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில் லெனின் வீதியில் அமைக்கப்பட்ட நீா், மோா் பந்தலை சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா திறந்து வைத்தாா். பின்னா், இளநீா், தா்பூசணி, மோா், கரும்புச்சாறு உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

நிகழ்வுக்கு கட்சியின் தலைமை பொதுக்குழு உறுப்பினரும், நெல்லித்தோப்பு தொகுதி பொறுப்பாளருமான வே.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், திமுக பொதுக்குழு உறுப்பினா்கள் கோபால், வேலவன், தங்கவேல், கோபாலகிருஷ்ணன், செந்தில் வேலவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com