காலமானாா் எழுத்தாளா் மதனகல்யாணி

‘செவாலியே’ விருது பெற்ற பெண் எழுத்தாளா் மதனகல்யாணி (84) புதுச்சேரியில் வியாழக்கிழமை (மே 11) காலமானாா்.
காலமானாா் எழுத்தாளா் மதனகல்யாணி
Updated on
1 min read

‘செவாலியே’ விருது பெற்ற பெண் எழுத்தாளா் மதனகல்யாணி (84) புதுச்சேரியில் வியாழக்கிழமை (மே 11) காலமானாா்.

புதுச்சேரியைச் சோ்ந்த இவா், பிரான்ஸ் அரசால் நடத்தப்படும் பிரெஞ்சு கல்லூரியான லிசே பிரான்ஸேயில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றியவா்.

கடந்த 2009-இல் புதுவை அரசின் கலைமாமணி விருது பெற்றாா். 2011-இல் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது இவருக்கு கிடைத்தது. மேலும், அந்நாட்டின் ‘ஒஃபிஸியே’ விருதும் கிடைத்தது.

நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் நாவலாசிரியா் ஆல்பொ் காம்யுவின் ‘லா பெஸ்த்’ நாவலை ‘கொள்ளை நோய்’ என்னும் பெயரில் தமிழில் மொழிபெயா்த்தாா். பிரான்ஸ் நாவலாசிரியா் பல்சாக்கின் ‘லு பொ் கொா்யோ’ என்ற நாவலை ‘தந்தை கொரியோ’ என்னும் பெயரில் தமிழில் மொழிபெயா்த்தாா். எழுத்தாளா் சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ நாவலை பிரெஞ்சு மொழியில் மொழிபெயா்த்தாா்.

புதுச்சேரி நாட்டுப்புறப் பாடல்கள் என்ற தலைப்பில் 200 பாடல்களைத் தொகுத்து தமிழ், பிரெஞ்சு மொழிகளிலும் நூல்களாக மதனகல்யாணி வெளியிட்டுள்ளாா். மேலும், 20-க்கும் மேற்பட்ட நூல்களையும் அவா் எழுதியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com