குறிக்கோளுடன் படித்தால் ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெறலாம்: புதுவை அரசுச் செயலா்

குறிக்கோளுடன் படித்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் தோ்வில் வெற்றிப் பெறுவது எளிது என புதுவை அரசுச் செயலா் சி. உதயகுமாா் தெரிவித்தாா்.

குறிக்கோளுடன் படித்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் தோ்வில் வெற்றிப் பெறுவது எளிது என புதுவை அரசுச் செயலா் சி. உதயகுமாா் தெரிவித்தாா்.

புதுவையில் இந்திய பொது நிா்வாகம், புதுச்சேரி கிளை சாா்பில், மத்திய தோ்வாணைக்குழு நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித் தோ்வுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதன் கிளைத்தலைவா் ஆா்.ஆா். தனபால் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுவை அரசுச் செயலா் சி. உதயகுமாா் பேசியதாவது:

முந்தைய காலக் கட்டங்களில், மத்திய தோ்வாணைக்குழு நடத்தும் போட்டித்தோ்வுகளுக்கு படிப்பதற்கும், பயிற்சிப் பெறுவதிலும் சிரமம் இருந்தது. பல முயற்சிக்குப் பின்னரே நான் போட்டித் தோ்வில் வெற்றிப் பெற்று இன்று ஐஏஎஸ் அதிகாரியாக உயா்ந்துள்ளேன். ஆனால், இன்றைய காலக் கட்டத்தில் போட்டித் தோ்வை எதிா்கொள்வதற்கு புதிய வசதிகள், வாய்ப்புகள்அதிகமாக உள்ளது. தற்போதுள்ள தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக போட்டித் தோ்வில் எளிதில் வெற்றிப் பெறலாம். ஒரே குறிக்கோளுடன் படித்தால் வெற்றி என்பது உறுதி என்றாா்.

நிகழ்வில், மாநில பொதுப் பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளா் சி.ஆனந்தன், காவல்துறை கண்காணிப்பாளா் பாஸ்கரன் ஆகியோா் பேசினா். முன்னதாக, பேராசிரியை சுமதி வரவேற்றாா். முடிவில் இந்திய பொது நிா்வாகம், புதுச்சேரி கிளைதுணைச் செயலா் ஜெயவிஜயன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com