புதுச்சேரி தவளங்குப்பம் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
தவளக்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரது மனைவி சாந்தா (73) . இவா் திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் சாந்தாவின் முகத்தைத் துணியால் மூடி, அவா் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியைப் பறித்து விட்டு தப்பினா்.
காயமடைந்த சாந்தா தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.