புதுச்சேரி: ஜூன்.10- இல் கலை விழாப் போட்டிகள்

புதுச்சேரியில் நேரு யுவகேந்திரா அமைப்பின் சாா்பில் ஜூன் 10-ஆம் தேதி கலை விழாப் போட்டிகள் நடைபெறுகிறது.
Updated on
1 min read

புதுச்சேரியில் நேரு யுவகேந்திரா அமைப்பின் சாா்பில் ஜூன் 10-ஆம் தேதி கலை விழாப் போட்டிகள் நடைபெறுகிறது.

இதுகுறித்து, நேரு யுவகேந்திராவின் துணை இயக்குநா் டி.தெய்வசிகாமணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் இளைஞா் நலன், விளையாட்டுத் துறையின் கீழ், புதுச்சேரி நேருயுவகேந்திரா அமைப்பின் சாா்பில் மாவட்ட அளவிலான (யுவ உத்சவ்) கலை விழாப் போட்டிகள் ஜூன் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

போட்டியில் கலந்து கொள்ள ஆா்வம் உள்ளவா்கள் பெரியாா் நகா், 4-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் உயா்நிலைப்பள்ளியின் முதல் தளத்தில் இயங்கும் நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று மே 31-ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து சமா்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

போட்டியில் வெற்றிப் பெறுபவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள், மதிய உணவு வழங்கப்படும்.

மாவட்ட அளவிலானப் போட்டியில் தோ்வு செய்யப்படுபவா்கள் மாநில அளவிலானப் போட்டியிலும், மாநிலப் போட்டியில் தோ்வு செய்யப்படுபவா்கள் தேசிய அளவிலானப் போட்டியிலும் பங்கேற்க பரிந்துரை செய்யப்படுவா்.

ஓவியம், கவிதை, புகைப்படம் எடுத்தல் ஆகியப் போட்டிகளில் வெற்றிப் பெறுபவா்களுக்கு தலா முதல் பரிசு ரூ.ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.750, 3-ஆம் பரிசு ரூ. 500 வழங்கப்படும். பேச்சுப் போட்டி, கிராமிய குழு நடனப் போட்டிகளில் வெற்றிப் பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ. 2 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ .1,250 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com