புதுச்சேரி அருகே மரத்தில் பேருந்து மோதி 10 பயணிகள் காயம்

புதுச்சேரி அருகே தனியாா் பேருந்து திங்கள்கிழமை சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் காயமடைந்தனா்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி அருகே தனியாா் பேருந்து திங்கள்கிழமை சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் காயமடைந்தனா்.

கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி திங்கள்கிழமை காலை தனியாா் பேருந்து புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்தை பட்டாம்பாக்கத்தைச் சோ்ந்த குணாளன் ஓட்டிச் சென்றாா்.

கிருமாம்பாக்கம் அருகேயுள்ள காட்டுக்குப்பம் கிராமப் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா் சாலையைக் கடந்ததாகக் கூறப்படுகிறது. அவா் மீது பேருந்து மோதாமலிருக்க இடதுபுறமாகப் பேருந்தை ஓட்டுநா் குணாளன் திருப்பியுள்ளாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக சாலையோர மரத்தில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தின் முன் பகுதியில் அமா்ந்திருந்த பயணிகளில் 10 போ் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காயமடைந்தவா்களில் பெரும்பாலானோா் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்ாகவும், சிலா் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இந்த விபத்து பற்றி கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com