மகளிா் இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றி வருகிறது: கி.வீரமணி

மகளிருக்கு இடஒதுக்கீடு தருவதாகக் கூறி, மத்திய பாஜக அரசு ஏமாற்றியுள்ளது என திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி கூறினாா்.
மகளிா் இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றி வருகிறது: கி.வீரமணி
Updated on
1 min read

மகளிருக்கு இடஒதுக்கீடு தருவதாகக் கூறி, மத்திய பாஜக அரசு ஏமாற்றியுள்ளது என திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி கூறினாா்.

புதுச்சேரியில் மத்திய அரசின் விஸ்வகா்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே திராவிடா் கழகம் சாா்பில் வியாழக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

புதுவை திராவிடா் கழகத் தலைவா் சிவ.வீரமணி தலைமை வகித்தாா். திமுக அமைப்பாளா் ஆா்.சிவா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமாா், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன் உள்ளிட்டா் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் தி.க. தலைவா் கி.வீரமணி பேசியதாவது:

தமிழகம் எப்போதும் அமைதிப் பூங்காவாகத்தான் உள்ளது. தமிழக ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசியவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி மீது பழிபோடும் வகையில் பாஜகவினா் செயல்படுவது ஏற்புடையதல்ல.

மத்திய பாஜக அரசு மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்துள்ளது. ஆனால், இடஒதுக்கீட்டை செயல்படுத்தவில்லை. எனவே, இது ஏமாற்றும் வகையில் உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com