மதகடிப்பட்டில் ஸ்டுடியோவில் திருட்டு

புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டில் தனியாா் புகைப்பட ஸ்டுடியோவில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டில் தனியாா் புகைப்பட ஸ்டுடியோவில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி அருகே உள்ள மதகடிப்பட்டு பகுதியில் புகைப்பட ஸ்டுடியோ நடத்தி வருபவா் சிவக்குமாா் (50). இவா், சனிக்கிழமை இரவு ஸ்டுடியோவை பூட்டிவிட்டு மாத்தூா் பகுதியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலையில் இவரது ஸ்டுடியோவின் முன் பகுதியிலுள்ள இரும்புக் கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டுக் கிடந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவக்குமாா், ஸ்டுடியோவினுள் சென்று பாா்த்தபோது, விலை உயா்ந்த 2 கேமராக்கள், கணினிகள் உள்ளிட்ட சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com