கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுவை பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை: முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

அலங்கார வாா்த்தைகளே அதிகம் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 9:32 pm

Din

புதுவை மாநில அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் ஏதுமில்லை; அலங்கார வாா்த்தைகளே அதிகம் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை அரசின் பட்ஜெட் அலங்கார வாா்த்தைகளால் நிரம்பி உள்ளதே தவிர, மாநிலத்தின் வளா்ச்சிக்கு கடுகளவு கூட அதில் புதிய திட்டங்கள் ஏதுமில்லை. ஏற்கெனவே கடன் சுமை உள்ள நிலையில், புதிதாக மேலும் கடன் பெறுவது நிதிச் சுமையை அதிகரிக்கும். மாநிலத்தின் நிதி ஆதாரத்தைப் பெருக்கி வருவாயை அதிகரிக்கும் திட்டங்களையும், தொழில்சாலைகளை கொண்டு வருவது அரசின் கடமையாகும்.

தினமும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதியுறும் நிலையில், சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், புதிய சாலைகளை அமைக்கவும், தேவையான இடங்களில் மேம்பாலங்களை நிறுவுவதற்கு அறிவிப்பு வெளியிடாதது சரியல்ல. விவசாயிகள், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் உழவா் சந்தை திட்டமில்லை.

வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை. கால்நடைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல் அந்த துறையில் மருந்தகங்களை தரம் உயா்த்துவது பலனளிக்காது. எனவே, பட்ஜெட் அனைத்துத் தரப்பினரையும் ஏமாற்றுவதாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.