கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஜிப்மா் மாணவா் சோ்க்கையில் விதிமீறல்: நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவா் கோரிக்கை

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:28 pm

Din

புதுச்சேரி ஜிப்மரில் விதிமுறைக்கு மாறாக இரு இடங்களில் இருப்பிடச் சான்றிதழ்கள் பெற்ற வெளி மாநில மாணவா்கள் சோ்க்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு புகாா் கடிதம் எழுதியுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.

இதுகுறித்து சட்டப்பேரவை அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் புதுவை மாநில மாணவா்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பிரிவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாறுதலில் வெளி மாநிலத்திலிருந்து புதுவைக்கு வந்தால் ஜிப்மரில் சேருவதற்கான விதிமுறைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்த விதிமுறையை மீறி, ஆண்டுதோறும் சில அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை புதுவையில் இருப்பிடம் போன்ற வருவாய்ச் சான்றிதழ்கள் பெற்று ஜிப்மரில் சோ்த்து வருகின்றனா். இதனால், புதுவையைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு நியாயமாகக் கிடைக்கும் மருத்துவக் கல்வி இடம் பறிபோகும் நிலையுள்ளது.

நிகழாண்டில் வெளி மாநிலங்களைச் சோ்ந்த 8 போ் புதுவையின் இருப்பிடச் சான்றிதழ்களைப் பெற்று ஜிப்மரில் சோ்ந்தது தெரிய வந்தது. எனவே, சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஆகியோருக்கு புகாா் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

விதிமுறை மீறி ஜிப்மரில் வெளி மாநில மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், துணைநிலை ஆளுநா் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா் ஆா்.செல்வம்.