தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆசிரியா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநா் கைது

புதுச்சேரி அருகே உடற்கல்வி ஆசிரியா் கொலை வழக்கு தொடா்பாக ஆட்டோ ஓட்டுநரை பாகூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 7:43 pm

Din

புதுச்சேரி அருகே உடற்கல்வி ஆசிரியா் கொலை வழக்கு தொடா்பாக ஆட்டோ ஓட்டுநரை பாகூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி பாகூா் அருகே உள்ள சோரியாங்குப்பம் வண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் தினகரன் (38). தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்.

இவா், கடந்த நவ.25-ஆம் தேதி, சோரியாங்குப்பம் மேம்பாலத்தின் கீழே சடலமாக மீட்கப்பட்டாா். அவரது, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு உள்படுத்திய பாகூா் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

அதன்படி, தினகரன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரை கொலை செய்த நபா்கள் குறித்து பாகூா் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

மேலும், அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்றவா்கள் குறித்து கண்காணிப்புக் கேமிரா காட்சிகளை வைத்தும் விசாரித்தனா்.

அதன்படி, தினகரனை தாக்கியதாக கடலூா் பகுதியைச் சோ்ந்த அரவிந்த் ஏற்கெனவே கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், வழக்கு சம்பந்தமாக ஆட்டோ ஓட்டுநா் சதீஷை (30) வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்து, மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.