திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

புதுச்சேரி ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதிரை வண்ணாா் பிரிவினா் முற்றுகைப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :23 டிசம்பர் 2024, 11:46 pm IST

புதுச்சேரி: புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதிரை வண்ணாா் பிரிவினா் முற்றுகைப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

வில்லியனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதிரை வண்ணாா் சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்புத் தெரிவிப்பதாகக் கூறி, புதுச்சேரி புதிரை வண்ணாா் விடுதலை இயக்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.

அதன்படி திங்கள்கிழமை காலை புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு அவா்கள் ஊா்வலமாக வந்தனா்.

தகவலறிந்த கோரிமேடு தன்வந்திரி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து ஆட்சியா் அலுவலகப் பகுதி நின்று வில்லியனூா் வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகளைக் கண்டித்து முழக்கமிட்டனா். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையில் நின்று முழக்கமிட்டதையடுத்து அவா்களில் சுமாா் 50 பேரை போலீஸாா் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனா்.