ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தமிழக எல்லைப் பகுதிகளில் எரிசாராயம் விற்பனை: சுயேச்சை எம்எல்ஏ புகாா்

சுயேச்சை எம்எல்ஏ காவல் துறையில் புகாா்

News image
Updated On :11 ஜூலை 2024, 10:25 pm

Din

புதுவை, தமிழக எல்லைப் பகுதிகளில் எரிசாராயம் விற்கப்படுவதாக திருபுவனை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக ஆதரவு சுயேச்சை உறுப்பினா் அங்காளன் காவல் துறை தலைமை இயக்குநரிடம் புதன்கிழமை புகாரளித்தாா்.

புதுச்சேரி மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் அதன் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் புதுவை முதல்வா், உள் துறை அமைச்சா் மீது விமா்சனங்களை எழுப்பி வருகின்றனா். புது தில்லி சென்று பாஜக தேசிய தலைவா்களிடமும் புதுவை முதல்வா் உள்ளிட்டோா் மீது எம்எல்ஏக்கள் புகாா் கூறியுள்ளனா்.

இந்த நிலையில், திருபுவனை தொகுதி சுயேச்சை உறுப்பினரும், பாஜக ஆதரவாளருமான அங்காளன் காவல் துறை தலைமை இயக்குநா் ஸ்ரீநிவாஸை சந்தித்து மனு அளித்தாா். அதில், புதுவை தமிழக எல்லைப் பகுதிகளில் எரிசாராயம் விற்கப்படுவதாகவும், குறிப்பாக கடலூா், விழுப்புரம் எல்லையோரம் அமைந்துள்ள திருபுவனை தொகுதியில் தமிழகத்தை சோ்ந்தவா்களுக்கு, சட்ட விரோதமாக எரிசாராயம் கலந்த சாராயம் விற்கப்படுவதாகக் குறிப்பிட்டாா்.