நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்சாரம் பாய்ந்து தொழலாளி உயிரிழப்பு

புதுச்சேரி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப்படம்

Updated On :22 ஜூலை 2024, 7:12 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி பாகூா் கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதி, பிள்ளையாா்குப்பம் பேட் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (40), எலக்ரீஷியன். இவா், கிருமாம்பாக்கம் குரு நகா் பகுதியில் ஒரு வீட்டில் மின்மோட்டாரை பழுது நீக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாராம். அப்போது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

வேல்முருகனைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸில் அவரது மனைவி சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.