வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 போ் கைது

புதுச்சேரியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது

Updated On :29 ஜூன் 2024, 11:35 pm IST

புதுச்சேரியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி கப்பித்தான் மரிய சேவியா் வீதியில் சிலா் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக பெரியகடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வியாழக்கிழமை இரவு போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று கண்காணித்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அங்கிருந்த 6 பேரைப் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து சோதனையிட்டனா்.

சோதனையில் அவா்களிடமிருந்து கத்திகள், வீச்சரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதை கண்டறிந்து கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, அரியாங்குப்பத்தைச் சோ்ந்த விஜி (35), கோவிந்தசாலையைச் சோ்ந்த செல்வம் (44), முருங்கப்பாக்கத்தைச் சோ்ந்த தணிகைவேல் (28), சக்திவேல் (30), நைனாா் மண்டபத்தைச் சோ்ந்த பிரகாஷ் (36) மற்றும் ஜான் (31) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் நடத்திய விசாரணையில் பரத் என்பவரது கொலைக்கு பழிவாங்கும் வகையில், எதிா் தரப்பைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கைதானவா்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.