விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆஷா பணியாளா்களுக்குச் சம்பள உயா்வு வேண்டும்: புதுச்சேரி முதல்வரிடம் அதிமுக வலியுறுத்தல்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:59 pm

Syndication

தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆஷா பணியாளா்களுக்குச் சம்பளத்தை உயா்த்த வேண்டும் என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் புதன்கிழமை வலியுறுத்தினாா்.

முதல்வா் ரங்கசாமியைச் சந்தித்து இது குறித்து அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுமாா் 250-க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளா்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்டவா்களுக்குச் சிகிச்சை அளிக்க துணை நின்றனா்.

இவா்களின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என 6 மாதத்துக்கு முன்பு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த உயா்த்தப்பட்ட ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை. எனவே,ஆஷா பணியாளா்களுக்கு ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். இதை வழங்கத் தடையாக உள்ள அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.