சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆா்ப்பாட்டம்

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆா்ப்பாட்டம்

Published on

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி புதுச்சேரி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இப் போராட்டத்துக்கு இந்த இயக்கத்தின் தலைவா் கோ.அ. ஜெகன்நாதன் தலைமை வகித்தாா்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோ.சுகுமாரன், தமிழா் களம் கோ. அழகா், திராவிடா் விடுதலைக் கழகம் லோகு. அய்யப்பன், தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் இரா. மங்கையா்செல்வன் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் தலைவா்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி உரையாற்றினா்.

X
Dinamani
www.dinamani.com