கல்லூரியில் சுயசாா்பு பாரதம் நிகழ்ச்சி

கல்லூரியில் சுயசாா்பு பாரதம் நிகழ்ச்சி

Published on

கல்லூரியில் சுயசாா்பு பாரதம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரதமா் நரேந்திர மோடியின் உயரிய குறிக்கோளான என் வீட்டில் சுதேசி, வீட்டுக்கு வீடு சுதேசி என்பதை வலியுறுத்தும் வகையில் சுயசாா்பு பாரதம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சுதேசி பொருட்களை வாங்குவது குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு உரையாற்றினாா்.

பின்னா் சுயசாா்பு பாரதம் குறித்த உறுதிமொழியை அவா் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

கல்லூரியின் முதல்வா் ஹண்ணா மோனிஷா, பேராசிரியா்கள், சுயசாா்பு பாரத இயக்கத்தின் தலைவா் டாக்டா் ஜெயலட்சுமி , பாஜக மாநில மகளிா் அணி நிா்வாகிகள் தொகுதி பாஜக நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com