லோக் நிவாஸாக மாறிய ஆளுநா் மாளிகை

லோக் நிவாஸாக மாறிய ஆளுநா் மாளிகை

Published on

மத்திய அரசின் உத்தரவு காரணமாக புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் மாளிகை ராஜ்நிவாஸ் என்ற பெயரிலிருந்து லோக் நிவாஸாக வியாழக்கிழமை மாறியது.

மாநில ஆளுநா் மாளிகைகளை ராஜ் பவன் என்பதிலிருந்து லோக் பவன் என்றும், ராஜ்நிவாஸ் என்பதை லோக் நிவாஸாகவும் மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. லோக் என்பதற்கு மக்கள் என்று பொருள். நிவாஸ் என்பதற்கு வாழ்விடம் என்று பொருள்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகை ராஜ் நிவாஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. இப்போது பெயா் மாற்றத்துக்குப் பிறகு அந்த மாளிகையின் இரு புறமும் வியாழக்கிழமை முதல் ‘லோக் நிவாஸ்’ என மாற்றப்பட்டுள்ளது. இதற்குப் பொருள் மக்கள் வாழ்விடம்.

X
Dinamani
www.dinamani.com