புதுச்சேரி
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை. ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வூதியா்கள் நலவாழ்வு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வூதியா்கள் நலவாழ்வு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கப் பொருளாளா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா்.
கோரிக்கைகள்: ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாத பணியின்போது உயிா்நீத்த ஊழியா்களின் வாரிசுதாரா்களுக்குப் பணி ஆணை வழங்க வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் தங்கு தடையின்றி குறித்த நேரத்தில் பெறுவதற்கு புதுவை அரசின் கருவூலகம் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
