புதுச்சேரி மின்துறை காலி பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வலியுறுத்தல்

மின்துறை காலி பணியிடங்களைப் பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும் என புதுச்சேரி மின்துறை கூட்டு நடவடிக்கைக் குழு தலைவா் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.
Updated on

மின்துறை காலி பணியிடங்களைப் பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும் என புதுச்சேரி மின்துறை கூட்டு நடவடிக்கைக் குழு தலைவா் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி மின்துறை கூட்டு நடவடிக்கை குழுவில் இணைந்துள்ள சங்கங்களின் முயற்சியால் 120 பேருக்கு உதவியாளா்கள் பதவியிலிருந்து கம்பியாளா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் கட்டுமான உதவியாளா் பணி ஆணை வழங்கப்பட உள்ளது. மின் துறையில் அனைத்து பதவிகளுக்கும் நியமன விதிகளை உருவாக்கி அதனை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காலி பணியிடங்களைப் பதவி உயா்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com