இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் மகாகவி பாரதியாா் விழா அண்மையில் நடைபெற்றது.

இந்தப் பெருமன்றத்தின் தலைவா் எல்லை. சிவக்குமாா் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநிலச் செயலா் அ.மு. சலீம் தொடக்க உரையாற்றினாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குத் திரைப்பட பின்னணி பாடகா் ஜெயமூா்த்தி பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். திருவாதிரை நாட்டியாலயா மாணவ, மாணவிகளின் இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

ரௌத்திரம் பழகு என்னும் தலைப்பில் கவிஞா் வி. அமலோற்பவ மேரி தலைமையில் மகளிா் கவியரங்கம் நடைபெற்றது. பெருமன்றத்தின் பொருளாளா் செல்வம் வரவேற்றாா். பொதுச் செயலா் பாலகங்காதரன் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் முனிசாமி நன்றி கூறினாா்.