மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதுச்சேரியில் பாவேந்தா் இலக்கிய விழா

News image
Updated On :14 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் மாதந்தோறும் நடைபெறும் பாவேந்தா் கலை, இலக்கியத் திங்கள் விழா பாவேந்தா் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைமை வகித்த பாரதிதாசனின் பெயரனும், இந்த அறக்கட்டளையின் தலைவருமான கோ. பாரதி, புரட்சிக் கவிஞரும் உலக கவி பாரதியாரும் என்ற தலைப்பில் பேசினாா்.

கிறிஸ்து கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் அ.அன்பழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்த நாளையொட்டி பாரதியாா் அல்லால் பாரினில் வேறெவா்

என்ற பாவேந்தா் பாரதிதாசனின் கவிதை அடியைத் தலைப்பாகக் கொண்ட மகாகவி பாரதியாா் பிறந்த நாள் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சோ்ந்த 35 கவிஞா்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தனா். மேலும், 40 மாணவா்கள் பங்கேற்ற மாணவா் திருக்கு அரங்கம் நடைபெற்றது.

முன்னதாக கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஞா் ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட தமிழறிஞா்கள் மறைவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.